பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்குஉட்பட்ட உழவர்சந்தை பகுதியில் பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட வணிக வளாகம்பயனின்றி வீணாகி வருகின்றன.
பரமக்குடி நகராட்சியில்காய்கறி மார்க்கெட், சின்னக்கடை தெரு, உழவர் சந்தை இயங்குகிறது. தற்போது நகர் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் பஸ் ஸ்டாண்ட், கீழ பள்ளிவாசல் தெரு, சிறுவர் பூங்கா ரோடு, முத்தாலம்மன், அங்காளம்மன் கோயில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருவோரக் கடைகள் அதிகரித்துஉள்ளன.
மீன் மார்க்கெட்டை ஓரிடத்தில் இல்லாமல் தங்கள் விருப்பம் போல் காலை நேரங்களில் பல இடங்களில் ரோட்டை ஆக்கிரமிப்பு நடத்துகின்றனர்.தெருவோர வியாபாரங்களால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.ஆக்கிரமிப்பில் உள்ள தெருவோரக்கடைகளை முறைப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE