விருதுநகர் : பல்வேறு சங்கங்களின் போராட்டம் காரணமாக விருதுநகர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் நேற்று மூடப்பட்டது. இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இரண்டாம் நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். இதே போல் சத்துணவு ஊழியர்களும், மாற்றுத்திறனாளிகளும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்போராட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் காலை 10:00 முதல் 11:00 மணி வரை நுழைவு வாயில் மூடப்பட்டது. இதோடு அலுவலக ரோட்டில் போக்குவரத்து தடை பட்டதால் நீதிமன்றம், எஸ்.பி., அலுவலகம், கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE