விருதுநகர் : "பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தவிரைவில் 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் வர உள்ளதாக,'' அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகரில் நடந்த பட்டாசு தொழிற்சாலைகள், தொழிலாளர்களின் நலன் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறைகளை குத்தகைக்கு அனுமதிக்க கூடாது. வெடிபொருள் கட்டுபாட்டு அலுவலர்கள் நிர்ணயித்த எண்ணிக்கையில் தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்ய வேண்டும். ஆலைகள் பசுமை பட்டாசுக்கள் தயாரிக்க முன்வர வேண்டும்.
விபத்தில்லாமல் உற்பத்தியை பெருக்கி தொழிலாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். விரைவில் 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த வர உள்ளனர், என்றார்.கலெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார். எஸ்.பி.,பெருமாள், டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், வெடிபொருள் கட்டுபாட்டு துணை தலைமை அலுவலர் சுரேந்திரன், டான்பாமா தலைவர் கணேசன், செயலாளர் அபிரூபன், டிக்மா நிர்வாகி கண்ணன், சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் விநாயகமூர்த்தி, தென்னிந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE