விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அங்கன்வாடி ஊழியர்கள் ,மாற்றுதிறனாளிகள் போராட்டத்தில் பங்கேற்ற 1342 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்குவது, அரசு ஊழியராக அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமையில் நேற்று 2ம் நாளாகமுற்றுகையிடும் போராட்டம் நடந்தது. 805 பேரை போலீசார்கைது செய்னர்.
*சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரும் தலைவர் சுதந்திரகிளாரா தலைமையில் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 357 பேர் கைதாகினர்.மாற்றுத்திறனாளிகள்உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தவும், தனியார்துறையில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரியும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குமரேசன், செயலாளர் நாகராஜன், பொருளாளர் ஜெயந்தி, துணைச்செயலாளர் அழகுராணி உட்பட 180 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE