பாகூர், : கிருமாம்பாக்கத்தில் முதியவர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருமாம்பாக்கம் பேட், பிள்ளையார்கோவில் வீதியை சேர்ந்த தெய்வசிகாமணி (எ) குமார், 52; வெல்டர் வேலை செய்தார். இவரது மனைவி கிருஷ்ணவேனி, 42; தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் கிருஷ்ணவேணி வேலைக்கு சென்றார். குமார் வீட்டில் இருந்தார். மாலை கிருஷ்ணவேணி வந்து பார்த்த போது, குமார் மயங்கி கிடந்தார். அவரை கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ மனைக்கு துாக்கிச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக கூறினர்.கிருமாம்பாக்கம் போலீசார் வந்து குமாரின் உடலை பரிசோதனைக்கு அனுப்பினர். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE