ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி சக்கம்பட்டி 14-வது வார்டு விரிவாக்கப்பகுதியில் அடிப்படை வசதி மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பகுதியில் நுாறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தெருவிளக்கு வசதி இல்லை. தெருக்கள், சந்துகளில் கழிவுநீர் கடந்து செல்வதற்கு வடிகால் இல்லை. மழைக்காலத்தில் கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து குடியிருப்பு வளாகத்தில் தேங்கி சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. பொதுக்குடிநீர் குழாய் இல்லை. இதுதொடர்பாக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. பேரூராட்சி மூலம் இப்பகுதிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அடிப்படை தேவைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.--------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE