திருக்கனுார் : செட்டிப்பட்டு அங்கன்வாடி மையத்திற்கு உதவியாளரை உடனடியாக நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகே மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வந்த மைய உதவியாளர் கடந்த 2017ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அதன் பிறகு இது வரை புதிதாக அங்கன்வாடி மையத்திற்கு உதவியாளர் நியமிக்கவில்லை.அங்கன்வாடி மையத்தின் பொறுப்பாளரே மழலைகளுக்கு பாடம் கற்பித்தல், சத்துணவு தயாரித்தல், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை தனியாக செய்கிறார். இதனால், மழலைகள் கல்வித்தரம், பொதுமக்களுக்கான நலத்திட்டம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க செட்டிப்பட்டு அங்கன் வாடி மையத்திற்கு விரைவில் உதவியாளரை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE