புதுச்சேரி : உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.புதுவை மக்கள் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி தாய்மொழி வழிக் கல்வி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி அரசு ஆணைகள், சான்றிதழ்களை தமிழில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது.ராஜா தியேட்டர் சிக்ன லில் உள்ள காமராஜர் சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில், புதுவை மக்கள் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முருகேசன், துணைத் தலைவர்கள் செல்வமணி, ரவிச்சந்திரன், பொருளா ளர் கணேசன் பங்கேற்றனர்.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, செயலாளர்கள் முருகன், ஆறுமுகம், பிரபா, தமிழரசன் உள்ளிட்டோர் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE