தேனி : தேனியில் சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஒய்வூதியம் வழங்கவும், ஓய்வு பெறும் போது அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், உதவியாளர், சமையலர்களுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கக்கோரியும் மறியல் போராட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் நிலவழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயப்பாண்டி, பொருளாளர் லட்சுமி , இணை செயலாளர் மணி மாலா முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்க மாநில துணை தலைவர் ராமமூர்த்தி, சாலைப்பணியாளர் சங்க செயலாளர் முத்தையா சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட பொருளாளர் பேயத்தேவன் பேசினர். கம்பம் ரோட்டில் மறியலில் ஈடுபட்ட 239 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE