காரைக்கால் : காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு, திருநள்ளாறு, திருப்பட்டினம் பகுதிகளில் 5,000 எக்டேர் பரப்பில் சம்பா நடவு பணிகள் நடந்தன. தற்போது நெல் அறுவடைப் பணி நடக்கிறது. நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் 30 நாட்களுக்கு மேலாக வயல்களிலும், சாலைகளிலும் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். தற்போது தொடர் மழையால் நெல் வீணாகிறது.இதனால் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல் விற்கும் நிலை உருவாகி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நெல் கொள்முதல் நிலையங் கள் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE