காரைக்கால் : காரைக்காலில் இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.காரைக்கால் கோவில்பத்து காட்டுநாயக்கன் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக மனைப்பட்டா வழங்கவில்லை. அப்பகுதியில் ரயில்வே பணிகள் நடந்து வருவதால், குடியிருக்கும் மக்களை காலி செய்ய கூறியுள்ளனர்.இதையடுத்து இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில், அப்பகுதி மக்கள் இலவச மனைப் பட்டா கோரி, கலெக்டர் அர்ஜூன் சர்மாவிடம் மனு அளித்தனர். கட்சி துணை செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE