திருவான்மியூர் : இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, 'ஆன்லைன்' வழியாக பண மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
திருவான்மியூர், வால்மிகி நகரைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன், 70. இவரை, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், 'ஆன்லைன்' வழியாக, புழல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 40, என்பவர் தொடர்பு கொண்டார். டிரேடிங் கம்பெனி நடத்தி வருவதாகவும், இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதை நம்பி, 40 ஆயிரம் ரூபாய், மணிகண்டன் வங்கி கணக்கில், 'ஆன்லைன்' வழியாக, சிவராமகிருஷ்ணன் செலுத்தி உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சம்பத், 52, என்பவரும், 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளார். ஆனால், பணம் வழங்காமல், மணிகண்டன் ஏமாற்றி வந்துள்ளார்.
பின், தொடர்பு எண்ணை துண்டித்துள்ளார்.ஏமாந்த இருவரும், அடையாறு காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளித்தனர். நேற்று, திருவான்மியூர் போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE