திண்டுக்கல் : மாநில வூசு குங்பூ (கராத்தே) போட்டியில் திண்டுக்கல் மாணவர்கள் 22 பதக்கங்கள் பெற்று 2ம் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு வூசு குங்பூ சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டி நடந்தது. போட்டியில் 3 பிரிவுகளில் சீனியர், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பிரிவுகளில் 3 நாட்கள் தூத்துக்குடியில் நடந்தது.இதில் திண்டுக்கல் மாவட்ட மாணவர்கள் 20 பேர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவு போட்டிகளில் 5 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 22 பதக்கங்களைப் பெற்று மாநில அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.மாணவர்களை திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி பாராட்டினார். டி.ஆர்.ஓ., கோவிந்தராசு, விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, பயிற்சியார் ஜாக்கிசங்கர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE