திண்டுக்கல்: 'பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி முதல்வர் பழனிசாமிக்கு, திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
அதில் பொதுச்செயலாளர் மேடா பாலன் கூறியிருப்பது: தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. காஸ் விலை உயர்வால், சரக்கு லாரி வாடகை உயர்ந்துள்ளது. மார்ச் 15 முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதற்கு முன் அவர்களை அழைத்து பேசி தடுக்க வேண்டும்.எரிபொருள் விலை உயர்வால் நடுத்தர மக்கள், சிறு தொழில் செய்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் விலை உயர காரணம் விதிக்கப்படும் வரிகளே. விலை உயர்வால் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். டோல்கேட்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE