திண்டுக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் ரோடு மறியலில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜெஸி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமு, இணை செயலாளர் மணிக்காளை முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி பேசினார்.'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவை தொகை வழங்க வேண்டும்.
தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.ஐ.ஏ.எஸ்., தலைமையிலான பணியாளர் சீரமைப்பு குழுவின் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும்' என வலியுறுத்தி, பஸ் ஸ்டாண்ட் அருகே ரோடு மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE