திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 7 வது நாளாக வருவாய்த்துறையினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். துணை தாசில்தார்களுக்கு தனி ஊதியம் ரூ.1300, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ.9300, இணையான ஆரம்ப ஊதியம் ரூ.36,900 வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' உட்பட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தினர். நானுாறுக்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு அலுவலகத்தில் பணிகள் பாதித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE