திண்டுக்கல் : பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்ட நிலையில், விரைவில் பாடத்திட்டத்தை (சிலபஸ்) முடித்து மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு பின் கடந்த ஜன.19 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகள் 'ஆன்லைன்' வகுப்பில் பாடத்திட்டத்தை (சிலபஸ்) முடித்து, தற்போது திருப்புதல் தேர்வுகளை நடத்தி வருகின்றன.அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஒத்துழைப்பு குறைவால் ஆன்லைன் மூலம் பாடத்திட்டத்தை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சமீபத்தில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிட்டதால் 'சிலபஸ்' முடிப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
வழக்கமாக மார்ச்சில் துவங்கும் பொதுத்தேர்வுக்கு தற்போது 2 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் பாடங்களை முடித்து, திருப்புதல் தேர்வுகளை நடத்தி மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.மேலும் தற்போது வரை முடிக்கப்பட்ட பாடங்கள் குறித்து ஆசிரியர்களிடம் அறிக்கை கேட்டு திருப்புதல் தேர்வுக்கு கால அட்டவணை தயாரிக்க வேண்டும். கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி தேர்ச்சி பெற வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE