திருத்தணி, : திருத்தணி அரசு மருத்துவமனையில், முதன் முறையாக, மூட்டுஅறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி அரசு மருத்துவமனையில் மூட்டு அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடியாததால், நோயாளிகள், திருவள்ளூர், சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர்.இந்நிலையில், முதன் முறையாக, திருத்தணி, அரசு மருத்துவமனையில், கடந்த, 17ம் தேதி, கல்லுாரி மாணவனுக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.திருத்தணி பகுதியைச் சேர்ந்த அதிரதன் என்ற கல்லுாரி மாணவர், கால்பந்து விளையாடும் போது, இடது கால் மூட்டு பகுதியில் பலத்த காயம் அடைந்து, எழுந்து நிற்க முடியாமல் தவித்தார்.இதையடுத்து, அந்த மாணவர், திருத்தணி அரசு மருத்துவமனையில் மூட்டு மற்றும் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் விக்னேஷிடம்சிகிச்சைக்கு வந்தார்.
மருத்துவர், மாணவர் காலில், மூட்டு பகுதியில்,ஜவ்வு கிழிந்ததை கண்டறிந்தார்.இதையடுத்து, 17ம் தேதி, மருத்துவர் விக்னேஷ் தலைமையிலான மருத்துவர்கள், ஒன்றரைமணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மூட்டு ஜவ்வை சீரமைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE