சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் வாக்கு சாவடி மண்டல பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடலூர் கிழக்கு மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தொகுதி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 39 ஓட்டுச் சாவடிகள், மற்றும் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் உள்ள 20 ஓட்டுச் சாவடிகளுக்கான மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.அமைப்பு செயலாளர் முருகுமாறன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு முருகையன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்றார். நகர செயலாளர் எம்ஜிஆர் தாசன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE