திருத்தணி : அரசு பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, ஓவியப் போட்டி நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவியருக்கு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருத்தணி, அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, மாணவியர் இடையே ஓவியப் போட்டி, நேற்று நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை தெமினா கிரேனாப் தலைமை வகித்தார். இதில், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, மொத்தம், 450 மாணவியர் ஓவியப் போட்டியில் பங்கேற்றனர்.இதில் வெற்றி பெற்ற, 40 மாணவியருக்கு, குழந்தை தொழிலாளர் முறை அகற்றும், திட்ட மேலாளர் வெங்கடேசன், திருத்தணி தனி தாசில்தார் சாந்தி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியவாணி ஆகியோர் பங்கேற்று, மாணவியருக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE