கடலுார் : கடலுாரில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட வங்கி ஊழியர் சங்க துணைத் தலைவர் மீரா தலைமை தாங்கினார்.
ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் திருமலை, வங்கி அதிகாரிகள் சங்கம் கண்ணன், பலராமன் முன்னிலை வகித்தனர். அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு வெங்கடேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பால்கி துவக்க உரையாற்றினர்.அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளன மண்டல செயலர் செந்தில்குமார், வங்கி அதிகாரிகள் சங்கம் ராஜமாணிக்கம், தேசிய வங்கி ஊழியர் மகா சம்மேளன கண்ணன், தாலுகா வங்கி ஊழியர் பொதுச் செயலர் ராஜேஷ் விளக்க உரையாற்றினர். பொதுத் துறை வங்கிகளையும், எல்.ஐ.சி.,யின் பங்குகளையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. உதவித் தலைவர் ரமணி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE