கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக புத்தாக்க திட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமை தாங்கி பேசுகையில், 'ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலமாக கிராமப் புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் துவங்க முழு முயற்சி எடுக்க வேண்டும்'என்றார்.கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் ராஜாத்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், மாவட்ட தொழில் மைய அலுவலர் இளங்கோவன்பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE