மதுரை : மதுரை விவசாய கல்லுாரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிழக்கு வட்டார வருவாய் கிராம விவசாயிகளுடன் மூன்று மாத களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடிக்குளம் முன்னோடி விவசாயி அக்கினியின் நிலத்தில் சம்பங்கி விதைக்கிழங்கை விதைநேர்த்தி செய்வதை கற்றுத் தந்தனர். மாணவிகள் பூமிகா, தீபிகா, சினின் ஜோனாபால், பாத்திமா ஸப்ரீன், ஆர்.தீபிகா, எஸ். தீபிகா, சஞ்சலா ஆகியோர் சம்பங்கி விதைகளை நடவு செய்தனர்.ஆண்டிபட்டி வட்டார வருவாய் கிராமங்களில் மாணவிகள் ஸ்வாதி, தமிழ்ச்செல்வி, த்ரிஷா, கோபி உமா பிரதியூஷா, வெண்ணிலா, எஸ்.வெண்ணிலா ஆகியோர் பஞ்ச கவ்யம் இயற்கை உரம் தயாரிப்பில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு இதன் பயன்களை விளக்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE