ஊத்துக்கோட்டை : வெங்கல் அடுத்த, வெள்ளியூர், கரிக்கலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர், கடந்த, 21ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு, கொசஸ்தலை ஆற்றில், குளிக்கும் போது இறந்து விட்டார்.
இவரை மீட்க, தீயணைப்புத் துறையினர் தாமதமாக வந்ததாக கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதித்தது.வெங்கல் போலீசார் சமாதானப்படுத்தினர். இதுகுறித்து, வெங்கல் போ லீசார், பாஸ்கர், 50, அமாவாசை, 55, வினோத், 30 உள்ளிட்ட, 34 பேர் மீது வழக்குப் பதிந்து உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE