பேரையூர் : பேரையூர் தாலுகாவில் சாகுபடி செய்யப்பட்ட துவரை செடிகள் பூ பூத்து குலுங்குகின்றன.இத்தாலுகாவில் பல கிராமங்களில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. துவரை செடிகள் விதைப்பு காலத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு பின்பே காய்ப்பு கிடைக்கும். ஆகஸ்ட்டில் விதைக்கப்பட்ட துவரை செடிகள் தற்போது பூத்து குலுங்குகின்றன.விவசாயிகள் கூறியதாவது: துவரை செடிகளுக்கு தொடர்ச்சியான மழை தேவைப்படும். பருவமழையால் வளர்ந்த துவரை செடிகள் பூக்கள் பூத்துள்ளது. இரு மாதங்களில் அறுவடைக்கு வரும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE