வாலிபருக்கு 'காப்பு'கடம்பத்துார்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன், 47. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், ஓராண்டாக ரயில்வே பாதுகாப்பு பிரிவில், ஒப்பந்த அடிப்படையில், பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம், கடம்பத்துார் ரயில் நிலையம் அருகே இருந்தபோது, அங்கு குடிபோதையில் வந்த இருவர், ஆபாசமாக பேசி, முனிகிருஷ்ணனை தாக்கியுள்ளனர்.அவரது புகாரை விசாரித்த, கடம்பத்துார் போலீசார், கலியனுார் சூர்யா, 22, என்பவரை கைது செய்தனர்; தப்பியோடிய ஏகாட்டூர் கோடீஸ்வரனை தேடுகின்றனர்.
சூதாடிய 9 பேர் கைதுதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, பெரியகுப்பம் பகுதியில், திருவள்ளூர் டவுன் போலீசார், நேற்று சோதனை நடத்தினர். அங்கு சீட்டு கட்டு வைத்து சூதாடிய, 25 - 50 வயதுடைய ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும், 82 ஆயிரம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.குழந்தையுடன் தாய் மாயம்கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே, ஏ.என்.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி ஜோதி, 30. கடந்த, 21ம் தேதி, கடைக்கு செல்வதாக கூறிவிட்டு, அவரது இரண்டு வயது ஆண் குழந்தை ஜெர்வீனுடன் வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை.கவரைப்பேட்டை போலீசார், நேற்று, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE