திட்டக்குடி : புவனகிரி அடுத்த கொடுமனுாரை சேர்ந்தவர் அகோரமூர்த்தி,37; அரசு பஸ் டிரைவர். கடந்த 21ம் தேதி கடலூரிலிருந்து திருச்சிக்கு அரசு பஸ்சை ஓட்டிவந்தார்.தொழூர் கணேசமூர்த்தி,52, கண்டக்டராக வந்தார். அரங்கூர் அருகே பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு, 22, பாலாஜி ஆகியோர் பஸ்சை முந்திச் செல்ல முயன்றனர். பஸ் டிரைவர் வழிவிடாததால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் பெரங்கியத்தில் பஸ்சை வழிமறித்து, கண்டக்டர் கணேசமூர்த்தியை தாக்கினர். ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விஷ்ணுவை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE