மைசூரு : வீடு ஒன்றின் மின்சார மீட்டர் போர்டில், மின் கசிவு ஏற்பட்டதில், தீப்பிடித்தது.
மைசூரு மாவட்டம், கே.ஆர்.பேட் தாலுகா அலுவலக சாலையில், சித்த ஷெட்டி என்பவர் வசிக்கிறார். இவர் நேற்று காலை, 10:00 மணிக்கு, பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்; வீட்டில் யாருமில்லை.அப்போது, வீட்டின் வெளிப்புறத்திலுள்ள, மீட்டர் போர்டில் மின் கசிவால் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதை பார்த்த அப்பகுதியினர், தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE