ஷிவமொகா : ''அவ்வப்போது, முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பேசி வரும், பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் ஹிந்துத்வாவாதி என்பதில் மகிழ்ச்சி,'' என, கிராம அபிவிருத்தித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
ஷிவமொகாவில், அவர் நேற்று கூறியதாவது:முதல்வர் எடியூரப்பா தொடர்பாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., எத்னால் பேசுவதை ஏற்க முடியாது. ஆனால் அவர் ஹிந்துத்வவாதி என்பதில், மகிழ்ச்சியடைகிறேன்.எத்னாலுக்கு, கட்சி மேலிடம் நோட்டீஸ் அளித்துள்ளது. அதற்கு பதிலளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, மத்திய தலைவர்கள் முடிவு செய்வர்.மாநிலத்தில் இட ஒதுக்கீட்டுக்காக, பல சமுதாயங்கள், போராட்டம் நடத்துகின்றன. தகுதியான சமுதாயங்களுக்கு, இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது, என் கருத்து.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE