பெங்களூரு : கல்வி கட்டணம் உயர்த்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடகா தனியார் பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்பினர், பெங்களூரில் நேற்று ஊர்வலம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளிகள், 2019 - 2020ன் கல்வி கட்டணத்தில், 70 சதவீதம் மட்டுமே, 2020 - 21ல் வசூலிக்க வேண்டும் என கர்நாடக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.கொரோனாவால், பெற்றோர் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால், இந்த உத்தரவை அரசு பிறப்பித்தது.மேலும், மாணவர் சேர்க்கை உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக, அரசு சில விதிமுறைகள் அறிவித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, கர்நாடக தனியார் பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்பினர், பெங்களூரில் நேற்று போராட்டம் நடத்தினர்.சங்கொல்லி ராயண்ணா சிட்டி ரயில் நிலையத்திலிருந்து சுதந்திர பூங்கா வரை, மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து, கூட்டமைப்பினர், ஊர்வலமாக வந்தனர்.
சுதந்திர பூங்கா வந்ததும், முதல்வர் எடியூரப்பா, தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமார் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.கொரோனா ஊரடங்கின் போதும், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கினோம். எனவே, 70 சதவீத கல்வி கட்டணத்துக்கு பதிலாக, முழு கட்டணம் செலுத்த உத்தரவிடும்படி, வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE