'நாங்கள் ஒதுக்கீடு செய்த பணத்தைவேறு பணிக்கு செலவழித்த பா.ஜ.,'ராம்நகர், பிப். 24-''காவிரி நீர்ப்பாசன பகுதி ஏரிகளுக்கு, நீர் நிரப்ப ஒதுக்கப்பட்டிருந்த, 6,000 கோடி ரூபாயை, மாநில அரசு வேறு பணிகளுக்கு செலவழித்துள்ளது,'' என, ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.
ராம்நகரில், அவர் நேற்று கூறியதாவது:காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில், காவிரி நீர்ப்பாசன பகுதியின் ஏரிகளுக்கு, நீர் நிரப்பும் திட்டத்துக்காக, 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை, தற்போதைய அரசு, வேறு நோக்கத்துக்கு பயன்படுத்தி யுள்ளது.மத்திய அரசிடம், 6,000 கோடி ரூபாய் நிதியுதவி பெற்று, கூடுதல் தண்ணீரை ஏரியில் நிரப்பும் திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. ஆனால், இது போன்ற திட்டத்தில் கர்நாடக அரசு ஆர்வம் காண்பிக்கவில்லை. மத்திய அரசும் கவனம் செலுத்தவில்லை.மாநிலத்தின் பல பிரச்னைகளுக்கு, தீர்வு கிடைக்கவில்லை. இந்த அரசில் கொள்ளையடிப்பதை தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE