மும்பை :'பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், நடந்த, மும்பை வர்த்தக சபை கூட்டத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசியதாவது:
மிக முக்கியமாகும்கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ள, மத்திய, மாநில அரசுகள் அதிகம் செலவிட வேண்டிஉள்ளது. அதற்கு அதிக நிதி ஆதாரம் தேவை. அரசுகளின் இந்த நிதித் தேவையை முழுமையாக புரிந்து கொள்கிறோம்.
![]()
|
அதே நேரத்தில், விலைவாசி உயர்வையும் கவனிக்க வேண்டியதும் மிக முக்கியமாகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதனால், பல பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.இதை எதிர்கொள்ள, பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டியது அவசியமாகிறது. மத்திய, மாநில அரசுகள் இதில், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE