சென்னை : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு கமல் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, மாதத்தின் முதல் தேதியில் மாற்றுகின்றன. நேற்று முன்தினம் வரை, வீட்டு சிலிண்டர் விலை, 785 ரூபாயாக இருந்தது. நேற்று, 25 ரூபாய் உயர்த்தப்பட்டு, 810 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விலை, 1,634.50 ரூபாய்.வீட்டு சிலிண்டர் விலை, இம்மாதம் மட்டும் மூன்று முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கமலின் டுவிட்டர் பதிவு: பெட்ரோல் டீசலுக்கு பக்கத்தில் கண்ணுக்கு எட்டாத தொலைவில் பறப்பது சமையல் எரிவாயு தான். ஏழைகளின் வயிறு எரிய எந்த வாயுவும் தேவையில்லை என மத்திய அரசு கருதுகிறதா; அந்த நெருப்பு ஆபத்தானது. இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE