சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வத்தை, பா.ஜ., மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்து பேச்சு நடத்தினர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,6ல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகளும் துவங்கியுள்ளன.

இந்நிலையில், அதிமுக - பா.ஜ., இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று(பிப்.,27) நடந்தது. இதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும், பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர்களான கிஷன் ரெட்டி, சி.டி.ரவி ஆகியோர் சந்தித்து பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE