காஞ்சிபுரம்: சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பேரூராட்சி, நகராட்சி, ஒன்றியங்களில், 'டெண்டர்' பணிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை, அதிகாரிகள் பின்பற்ற துவங்கி உள்ளனர். அதில் குறிப்பிடும்படியாக, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும், 'டெண்டர்' பணிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து பேரூராட்சிகளும், ஐந்து ஒன்றியங்களும், ஒரு நகராட்சியும் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமல்லாமல், பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் வழக்கமாக நடைபெறும், 'டெண்டர்' பணிகள், சட்டசபை தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்படுகின்றன.'டெண்டர்' விடப்பட்டு இருந்தாலும், அவை பிரிக்கப்படாமல் இருக்கும் என, ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, பூமி பூஜை போடப்பட்ட பணிகள் மட்டுமே, தொடர்ந்து நடைபெறும் எனவும், அடுத்து வரும் நாட்களில், புதிய பணிகள் எவையும் நடைபெறாது எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE