குடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா
குடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா

குடும்ப ஆட்சி அடிப்படையே திமுக-காங் கூட்டணி: அமித்ஷா

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (47) | |
Advertisement
விழுப்புரம்: குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது திமுக-காங்கிரஸ் கூட்டணி என விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் அதிமுக பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தங்கள் கூட்டணியை அமைத்துள்ளனர். அதிமுக - பாஜ கூட்டணிக்கு ஆதரவாக

விழுப்புரம்: குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது திமுக-காங்கிரஸ் கூட்டணி என விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமர்சித்துள்ளார்.



latest tamil news



தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் அதிமுக பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தங்கள் கூட்டணியை அமைத்துள்ளனர். அதிமுக - பாஜ கூட்டணிக்கு ஆதரவாக பல்வேறு பாஜக தலைவர்களும் தமிழகமெங்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.



இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உள் துறை அமித் ஷா, "நாட்டின் பழமையான மற்றும் தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தும் அளிக்கிறது. இதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று தனது பேச்சை தொடங்கினார்.




சோனியா, ஸ்டாலின் சிந்தனை


அப்போது அமித் ஷா பேசுகையில், "அதிமுக - பாஜக கூட்டணி மக்களுக்கான கூட்டணி. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்த கூட்டணி உழைக்கும். மறுபுறம், உள்ள திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது ஊழல் நிறைந்தது. குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது. ராகுலை பிரதமர் ஆக்குவது குறித்து சோனியா, உதயநிதியை முதல்வராக்குவது குறித்து ஸ்டாலினும் சிந்தித்து வருகின்றனர்.




2ஜி, 3ஜி & 4ஜி



காங்கிரஸ் கட்சி ரூ .12 லட்சம் கோடி ஊழலில் ஈடுபட்டது, அப்போது திமுகவும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது. இன்று தமிழகத்தில் 2ஜி, 3ஜி & 4ஜி ஆகிய மூன்றும் உள்ளன. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் 2 தலைமுறைகள், 3ஜி என்றால் கருணாநிதியின் குடும்பத்தின் 3 தலைமுறைகள். 4 ஜி என்றால் சோனியா குடும்பத்தின் 4 தலைமுறைகள்" என்றும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.



latest tamil news



2022ஆம் ஆண்டிற்குள் குடிசை இல்லாத இந்தியாவைப் படைக்க வேண்டும் என தெரிவித்த அவர், கடந்த 70 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்களுக்கு வீடு இல்லை என்றும் கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசு அதனைச் செய்துள்ளது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (47)

santhakumari - chennai,இந்தியா
02-மார்-202111:18:02 IST Report Abuse
santhakumari குடும்ப அரசியல் செய்யும் காங்கிரஸ் தி.மு.க என்றால் அவர்கள் மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தினார்களே ரவுடிகளையும் கொள்ளையர்களையும் சேர்த்துக்கொண்டு மக்களையும் விவசாயிகளையும் தவிக்கவிட்டு பொய்களை பரப்பிவரும் ம.அரசும், த.அரசும் தேவையில்லை
Rate this:
Cancel
01-மார்-202119:53:44 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இரண்டு வாரிசுமே தத்தீங்க , எதற்குமே லாயக்கு இல்லாததுங்க
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
01-மார்-202116:25:39 IST Report Abuse
M.COM.N.K.K. பொதுவாக மக்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களை நாமும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.அது வாரிசாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.வாரிசுகளை மக்கள் ஏற்றுக்கொண்டால் அதை நாம் குறைசொல்ல தேவை இல்லை என்பதே எங்கள் எண்ணம்.வாரிசு அரசியல் வேண்டாமே என்பதை நமது மக்கள்தான் முடிவுசெய்வார்கள் அது நம் கையில் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X