வேலுார்: ராணுவ அதிகாரியின் மனைவி, மகள், ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டனர்.
வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த கீழ்விலாச்சூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 44; மேகாலயாவில், துணை ராணுவத்தில் இன்ஸ்பெக்டர். இவரது மனைவி ஜெயந்தி, 30; மகன் தருண்குமார், 7; மகள் நந்திதா, 4. இவர்கள், கீழ்விலாச்சூரில் தங்கிஇருந்தனர்.பிப்., 2ல், விடுமுறையில் சொந்த ஊருக்கு ராஜேஷ்குமார் வந்தார். அவர்கள் கட்டிய, புது வீட்டுக்கு சமீபத்தில் கிரஹப்பிரவேசம் நடந்தது.
இந்நிலையில், நேற்று காலை மனைவி, மகள் வீட்டில் இல்லாததால், அவர்களை ராஜேஷ்குமார் தேடினார். அப்போது, விரிஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு விசாரித்தனர். இதில் அவர்கள், குடும்ப பிரச்னையால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரிந்தது. தொடர்ந்து, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE