வீரபாண்டி :ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பொது மக்களுக்கு, தி.மு.க.,வினர் இலவசமாக பெட்ரோல் வழங்கினர்.பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை, முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. தற்போது, 1 லிட்டர் பெட்ரோல், 93.54 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், நடுத்தர, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், சேலம் அருகேயுள்ள ஆட்டையாம்பட்டியில் நேற்று கொண்டாடப்பட்டது. 'மாஜி' அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், இளைஞரணி அமைப்பாளருமான பிரபு, பேரூர் செயலர் முருகபிரகாஷ் ஆகியோர், இரு சக்கர வாகனங்களில் வந்த பொதுமக்களுக்கு, 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி, இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.வழக்கமாக, கட்சி தலைவர்களின் பிறந்த நாளில் கேக், இனிப்பு, புடவை, பிளாஸ்டிக் குடம் ஆகியவற்றை வழங்கி வந்த நிலையில், விண்ணை முட்டும் விலையாக உயர்ந்துள்ள பெட்ரோலை வழங்கினர். நேற்று, 250 பேருக்கு, 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.சட்டசபை தேர்தலில், வீரபாண்டி தொகுதியில், 'சீட்' கேட்டு, பிரபு, முருகபிரகாஷ் இருவரும் விண்ணப்பித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE