குன்னூர் : குன்னூர் மற்றும் கோத்தகிரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், நீலகிரி மாவட்டம் சோதனைச் சாவடிகள் மற்றும் பல இடங்களிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.70 ஆயிரமும், கட்டபெட்டுவில் ரூ. 1.46 லட்சமும், பர்லியார் சோதனை சாவடியில் ரூ.73 ஆயிரமும் என 2.89 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கட்டபெட்டு பகுதியில் நடத்திய சோதனையில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் பிடிபட்டது.
இதே போல குன்னூர் பர்லியார் சோதனை சாவடியில் 73 ஆயிரம் ரூபாய் பிடிபட்டது
இவற்றை குன்னூர் ஆர்.டி.ஓ., அலுவலத்தில் கொண்டு வந்து சரிபார்க்கப்பட்டு, கருவூலத்தில் கட்டப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE