அரசியலுக்கு சசிகலா முழுக்கு: தினகரன் அதிர்ச்சி| Dinamalar

அரசியலுக்கு சசிகலா முழுக்கு: தினகரன் அதிர்ச்சி

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (100) | |
சென்னை: அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொடர் பிரார்த்தனை செய்ய உள்ளதாக சசிகலா இன்று திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தினகரனை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:நான் என்றென்றும் பதவிக்காக வோ, பட்டத்திற்காகவோ,அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலிதாவின் தொண்டர்களுக்கும் , தமிழக மக்களுக்கும்

சென்னை: அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொடர் பிரார்த்தனை செய்ய உள்ளதாக சசிகலா இன்று திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தினகரனை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.



latest tamil news


இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:நான் என்றென்றும் பதவிக்காக வோ, பட்டத்திற்காகவோ,அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலிதாவின் தொண்டர்களுக்கும் , தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் பொது எதிரியின் ஆட்சி அமையாது தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொண்டர்கள் பாடு பட வேண்டும். ஜெயலிதாவின் உண்மை தொண்டர்களுக்கும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி . இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


latest tamil news



தினகரன் அதிர்ச்சி


சசிகலாவின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - டி.டி.வி.தினகரன்சசிகலா அவரது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். சசிகலாவின் அறிக்கை எனக்கு சோர்வை வரவழைக்கிறது.சசிகலாவை அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அரை மணி நேரம் வலியுறுத்தினேன். அறிக்கை மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். சட்ட போராட்டம் மூலம் அ.தி.மு.க.வை மீட்க போராடிக்கொண்டிருக்கிறார். - டி.டி.வி.தினகரன்.



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X