புதுடில்லி: கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, தற்போது 1,80,304 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் நேற்று மட்டும் 7,51,935 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 18, 327 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,92,088 ஆக அதிகரித்து உள்ளது.
14,234 பேர் வீடு திரும்பியதை தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08.54,128 ஆக அதிகரித்து உள்ளது. 1,80,304 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும் 108 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, கொரோனா காரணமாக உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,57, 656 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில், இது வரை 22,06,92,677 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இதுவரை, 1,94,97,704 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE