சென்னை: டைம்ஸ்நவ் - சிவோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் திமுக ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கிவிட்டாலே கருத்துக்கணிப்புகள் வரத்துவங்கிவிடும். இந்தியாவில் இன்னும் சில தினங்களில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் யார் வெற்றிப்பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பை டைம்ஸ்நவ் - சிவோட்டர்ஸ் இணைந்து நடத்தியுள்ளன. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளை வழக்கமாக வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக., கூட்டணியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கருத்துக்கணிப்பின்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 158 இடங்களையும், அதிமுக கூட்டணி 65 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் 5 இடங்களிலும், அமமுக 3 இடங்களிலும், இதர கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றிப்பெற வாய்ப்புள்ளதாக டைம்ஸ்நவ்-சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி அரசு ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 30 இடங்களில் பா.ஜ., - என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி 18 இடங்களிலும், காங்., - திமுக கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
மேற்குவங்கம்:
திரிணமுல் காங்., - 154
பா.ஜ., - 107
கம்யூ., - காங்., கூட்டணி - 33
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE