கோவை:கோவை வரதராஜபுரம் என்.ஜி.ஆர்.நினைவு உயர்நிலைப்பள்ளியில், 1988ல், 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள், 30 பேர் நேற்று, அவிநாசி ரோடு கோகுலம் பார்க் ஓட்டலில் சந்தித்தனர்.48 வயதை கடந்த இவர்களில், பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள். சிலர் வெளிநாடுகளிலும், பிற மாநிலங்களிலும் வசிக்கின்றனர்.நேருக்கு நேர் சந்தித்தபோது, ஒருவருக்கு ஒருவர், யார் என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியவில்லை. பெயர் மற்றும் ஊரை சொல்லி அறிமுகம் செய்து கொண்டு, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.ஒருங்கிணைப்பாளர் ரவி கூறுகையில், ''இந்த சந்திப்பு எல்லோருக்கும், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் வாட்ஸ் ஆப் மற்றும் முகநுால் வழியாக, சிலரை அடையாளம் கண்டு பிடித்தோம். பிறகு ஒவ்வொருவராக அடையாளம் தெரிந்து, நட்பு வட்டத்தில் இணைந்தனர். கொஞ்ச நாட்களில் எல்லோரையும் கண்டுபிடித்து விட்டோம். நண்பர்கள் சுபாபாலி, ரமேஷ்குமார் முயற்சிதான் இந்த சந்திப்புக்கு முக்கிய காரணம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE