புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,46,652 ஆகவும், 32,987 பேர் குணமடைந்ததால், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,12,64,637 ஆகவும் உயர்ந்துள்ளது.
தற்போது 4,21,066 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,60,949 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நேற்று மட்டும்11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதனால், இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 23.86 கோடியை தொட்டுள்ளது.
மேலும், தற்போது வரை 5,55,04,440 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE