புதுடில்லி : இன்று (ஏப்.,1 ம் தேதி) முதல் சிறுசேமிப்புகளுக்கான வட்டியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அவரது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
![]()
|
இது குறித்து நேற்று ( மார்ச்31) மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது: வங்கி சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4 சதவீத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. பிபிஎப் வட்டி விகிதம் 7.1 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
![]()
|
மேலும் ஒராண்டுக்கான வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் .
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement