புதுடில்லி: டில்லி உட்பட பல்வேறு இடங்களில், தாக்குதல் நடத்த சதி செய்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிக்கு, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில், தாக்குதல்கள் நடத்துவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.இதற்காக, பயங்கரவாதி பஹதுார் அலி, அவரது உதவியாளர்கள் அபு சாத், அபு தர்தா ஆகியோரை, ஜம்மு - காஷ்மீர் எல்லை வழியாக, நாட்டிற்குள் அனுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு படையினர், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, 2016ல் குப்வாராவில், பஹதுார் அலியை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து, 'ஏகே' ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தலைமறைவான அவரது உதவியாளர்கள், அதே பகுதியில், 2017ல் நடந்த, 'என்கவுன்டர்' தாக்குதலில் கொல்லப்பட்டனர். பஹதுார் அலி மீதான வழக்கை விசாரித்த, பாட்டியாலா என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் உறுதியானதால், அவருக்கு, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE