பாகூர்: ஹெல்ப்பேஜ் இந்தியா சார்பில், முதியோர் சுய உதவிக்குழுவினருக்கு, இயற்கை உரம் (பயோசார்) தயாரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.ஹெல்ப்பேஜ் இந்தியா மற்றும் ஹெல்ப்பேஜ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், புதுச்சேரியில் உள்ள முதியோர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு (பயோசார்-) இயற்கை உரம் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.திட்ட மேலாண்மை தலைவர் வேணுகோபால் ராமலிங்கம் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் தயாநிதி முன்னிலை வகித்தார். பயிற்சியாளர்கள் பிரசாத், மகேஸ்வரி ஆகியோர் செயல்முறை விளக் கத்துடன் இயற்கை உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.பாகூர், புதுக்குப்பம், பரிக்கல்பட்டு, மடுகரை, நெட்டப்பாக்கம், சேலியமேடு, குடியிருப்பு பாளையம் கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட முதியோர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE