புதுச்சேரி: புதுச்சேரி பொறியியல் கல்லுாரி முதல்வர் கோதண்டராமனுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.விழாவில், பேராசிரியர் விவேகானந்தன், பேராசிரியர் ஸ்ரீநாத், டீன் சுந்தரமூர்த்தி ஆகியோர் பணி ஓய்வு பெற்ற முதல்வர் கோதண்டராமனின் 34 ஆண்டு பணிகள் குறித்து பாராட்டி பேசினர்.பணி ஓய்வு பெற்ற கல்லுாரி முதல்வர் கோதண்ட ராமனுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, ஓய்வு பெற்ற முதல்வர் கோதண்டராமன் ஏற்புரை வழங்கினார்.ஏற்பாடுகளை கல்லுாரி ஊழியர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் நாகராஜன், காசாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE