விழுப்புரம்: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தர வேண்டும் என அமைச்சர் சண்முகம் பேசினார்.விழுப்புரம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக சண்முகம் போட்டியிடுகிறார். இவர், நேற்று விழுப்புரம் நகராட்சியில் ஆடல் நகர், வழுதரெட்டி, மஞ்சு நகர், பெரியகாலனி, நாயக்கன் தோப்பு, மந்தக்கரை, சித்தேரிக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது, அவர் பேசியதாவது:தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் தான் பெண்கள் அச்சமின்றி வெளியில் சென்று வருகின்றனர். உங்கள் வீட்டு பெண்கள் பாதுகாப்பாக இருக்க அ.தி.மு.க.,விற்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். பெண்கள் மீது அக்கறை உள்ளதால் தான், மாதந்தோறும் குடும்ப தலைவிக்கு 1,500 ரூபாய் மற்றும் ஆண்டிற்கு 6 காஸ் சிலிண்டர் இலவசம் ஆகியவை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் முதல்வர் அறிவித்துள்ளார் என்றார்.அப்போது, அ.தி.மு.க.,வினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE