சென்னை : 'நாடு முழுதும், 2.5 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு, அவர்களது பணி இடங்களிலேயே, கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்' என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்க கூட்டமைப்பான, 'கிரெடாய்' அறிவித்துள்ளது.
கிரெடாய் அமைப்பின் புதிய தேசிய தலைவர் ஹர்ஷ்வர்தன் பட்டோடியா கூறியுள்ளதாவது:கிரெடாய் அமைப்பு, 21 மாநிலங்களில், 217 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் உறுப்பினராக உள்ளவர்களின், கட்டுமான திட்டங்களில், 2.5 கோடி பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் அனைவருக் கும், அந்தந்த பகுதிகளிலேயே, கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும். இதனால், கொரோனா பரவலில் இருந்து, கட்டுமான பணியாளர்கள் பாதுகாக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE